இலங்கை செய்திகள்


சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோர் அதிகரிப்பு

Sep 17, 2023


தொழில் வாய்ப்பிற்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என  பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.