யாழ்.நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் கணேசபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நல்லையா அமிர்தராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அன்புள்ள அம்மா!
மாதம் ஒன்று கடந்தாலும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது..
கண்மணிகள் நாம் கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறை
வரம் தாரோயோ அம்மா
உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காத
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா
கண்ணுக்குள் மணிபோல்
இமைபோல் காத்தோயே அம்மா.
உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
எம்மோடு இருந்து உதவி புரிந்து, ஆறுதல் கூறி அனுதாபம் வழங்கி,
நேரில் பங்கெடுத்து பரிவினைக் காட்டி தொலைபேசியிலும், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இணைய வழியாகவும் கலந்து கொண்டு அனுதாபத்தை தெரிவித்தும் ஆறுதல் வார்த்தைகளை கூறிய
நல் உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 21-12-2022 புதன்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்திலும் நடைபெறும், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
குடும்பத்தினர் |