25 Jan 2023
கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்றை சிலர் அங்கிருந்து அகற்றிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்து வாகனம் ஒன்றில் வந்த 4 பேர் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.