17 Mar 2023
வியாழன்(16) அதிகாலையில் பணியின் போது இரண்டு எட்மண்டன் பொலிஸ் சேவை ரோந்து அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
எட்மண்டன் பொலிஸ் சேவை அதிகாரிகள், 35 வயதான கான்ஸ்ட். டிராவிஸ் ஜோர்டான் மற்றும் 30 வயதான கான்ஸ்ட். பிரட் ரியான், 114 அவென்யூ மற்றும் 132 தெருவிற்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மதியம் 1 மணிக்கு முன்னதாக ஒரு வீட்டில் நடைபெற்ற தகராறிற்கு அழைக்கப்பட்டார்கள்.
இரண்டு ரோந்து உறுப்பினர்களும் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் சென்று, ஒரு வீட்டினை அணுகியபோது ஒரு ஆண் நபரால் சுடப்பட்டனர்.
சுட்ட சந்தேக நபர் 16 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது, சம்வத்தில்அவரும் இறந்துவிட்டார் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார் என்று புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்
எட்மண்டன் பொலிசார் கூறுகையில் சிறுவன் தனது தாயை சுட்டதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
எட்மண்டன் பொலிஸ் சேவை தலைவர் டேல் மெக்பீ இரண்டு மேற்கு முனை ரோந்து உறுப்பினர்களின் மரணத்தை 'நினைக்க முடியாத மற்றும் பயங்கரமான சோகம்' என்று கூறியுள்ளார்.