23 Jan 2023
நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நீர்வழங்கல் மற்றும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நானுஓயா – ரதெல்ல குறுக்கு வளைவில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், வான் சாரதி, ஓட்டோ சாரதி ஆகிய ஏழுபேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து இன்றைய (23) அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ஜீவன் முன்மொழிந்ததையடுத்து, இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதும் இழப்பீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.