18 Mar 2023
மிசிசாகாவில் உள்ள லேக்க்ஷோர் மற்றும் எலிசபெத் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வெளியே இருவர் சுடப்பட்டதில் ஒருவர் இறந்ததை அடுத்து, பீல் பொலிசார் ஒரு கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவு 1:00 மணியளவில் இரண்டு பேர் சுடப்பட்டதாகவும் ஒரு வாகனம் அப்பகுதியில் இருந்து தப்பிச் செல்வதையும் காணக்கூடியதாகக் கிடைத்த தகவலுக்குப் அமைய பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இருவரும் முதலுதவி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரண்டாவது நபரின் நிலமை தெரியவரவில்லை.
எலிசபெத் மற்றும் ஸ்டேவ்பேங்கிற்கு இடையே லேக்க்ஷோர் மூடப்பட்டு உள்ளது மற்றும் காவல்துறையின் கொலைப் பிரிவு பணியகம் சம்பவத்தை விசாரித்து வருகிறது.