16 Apr 2018
நேற்று 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தவிர அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய கால கட்டத்தில் வீதி விதிமுறைகளுக்கு அமைய வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.