உலகம் செய்திகள்

பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலி

26 May 2023

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கோட் அசாம் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam