கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்
06 Aug 2022
வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 – 40 வயதுடையவர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.