18 Mar 2023
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், மேற்குகரையின் ரஹ்மல்லா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாலஸ்தீனியர் தான் வைத்திருந்த கத்தியால் இஸ்ரேலிய பாதுகாப்புபடையினர் மீது தாக்குதல் நடந்த முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்ற பாலஸ்தீனியரை சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட நபர் யஷ ஹாசிப் (வயது 23) என பாலஸ்தீனிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.