உலகம் செய்திகள்

இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

16 Mar 2023


இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதன் தலைநகரான ஜகார்த்தா அருகே உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்தனர். மேலும் பல மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam